ஈரான் போருக்கு நடுவில் இந்தியாவுக்கு வரும் அப்பாஸ் அராக்சி.. திடீர் பயணம் எதற்காக?

Subscribe to Oneindia Tamil

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அடுத்த வாரம் டெல்லிக்கு வரவுள்ளார். மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் BRICS வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் பங்கேற்க உள்ளார். அப்பாஸ் அராக்சி-யின் வருகை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஈரான் போர் தாக்குதல் குறைந்தாலும், ஹார்முஸ் வழியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை வரவில்லை. இதனால் நாளுக்கு நாளுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு அச்சம் அதிகரித்துள்ளது. இன்றளவு எரிவாயு சிலிண்டருக்காக மக்கள் தவித்து வருகின்றனர்.

Iran War Abbas Araghchi visit to India Iran Foreign Minister Delhi BRICS Foreign Ministers Meeting May 2026 West Asia tensions India Iran oil supply disruption Hormuz strait oil India rising petrol diesel prices India Iran gas supply shortage BRICS role in West Asia crisis India BRICS presidency Araghchi Jaishankar talks Iran India energy cooperation Iran diplomatic visit India West Asia peace BRICS Iran energy security India BRICS BRICS BRICS BRICS

இந்த பயணம் சாதாரண அரசியல் சந்திப்பு இல்லை என மேற்கத்திய நாடுகள் பார்க்கின்றன. காரணம், கடந்த மாதம் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான், கத்தார், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றார். இதை தொடர்ந்து இந்தியாவுக்கு வருகிறார்.

இதனால், அப்பாஸ் அராக்சி இந்த சந்திப்பு இந்தியா - ஈரான் உறவுகளிலும், BRICS அமைப்பின் எதிர்கால அரசியல் பங்களிப்பிலும் முக்கிய திருப்பமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரான் இந்தியாவுக்கான எரிபொருள் சப்ளையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும் இந்த சந்திப்பு பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் BRICS கூட்டமைப்பில் இணைந்த ஈரான், அதன் பின்னர் நடைபெறும் முக்கிய கூட்டங்களுக்கு தொடர்ந்து உயர்மட்ட பிரதிநிதிகளை அனுப்பி வருகிறது. உலக அரசியலில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு மாற்றாக உருவாகும் சக்திவாய்ந்த கூட்டணியாக BRICS-ஐ ஈரான் பார்க்கிறது.

மேலும் அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், BRICS நாடுகள் தலையிட்டு சமாதான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஈரானுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தற்போது BRICS தலைமை பொறுப்பில் இருப்பதால், இந்த விவகாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதையும் ஈரான் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு BRICS அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. அதனால், டெல்லியில் நடைபெறும் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் சர்வதேச அளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள BRICS உச்சி மாநாட்டிற்கான ஆலோசனைகளும் இங்கு நடைபெறவுள்ளன.

இந்த சூழலில், மேற்கு ஆசிய பிரச்சினைகள் குறித்து BRICS நாடுகள் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க இந்தியா முயற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலகின் வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளை இணைக்கும் அமைப்பாக BRICS மாறிவரும் நிலையில், அதன் அரசியல் தாக்கமும் அதிகரித்து வருகிறது.

மேற்கு ஆசிய பதற்றம் குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இடையே ஆலோசனைகள் நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+