ஜெய் பீம்: நடிகர் சந்தானத்தின் கருத்தால் டிவிட்டரில் ட்ரெண்டாகும் எதிர்ப்பு ஹேஷ்டேக்
சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைக் குறிக்கும் சின்னம் இடம்பெற்றது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து பெரிதாகி வருகிறது. தற்போது நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து அமெசான் ப்ரைமில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் குருமூர்த்தி என்ற காவலரின் வீட்டில் வன்னியர்களின் சின்னமான 'அக்னிகும்பம்' இடம்பெற்ற நாட்காட்டி சுவற்றில் தொங்குவதைப் போன்ற காட்சி இடம்பெற்றது.
இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும் பிற வன்னியர் அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, கடவுளின் படம் உள்ள நாட்காட்டி அங்கு உள்ளதைப் போல மாற்றப்பட்டது.

https://twitter.com/draramadoss/status/1458336431244337155
இருந்தபோதும் சூர்யாவும் படக்குழுவினரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லாவிட்டால் 5 கோடி ரூபாய் இழப்பீடாகத் தர வேண்டுமெனக் கோரி சூர்யாவுக்கு வழக்கறிஞர் கே. பாலு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
- 'உண்மையான செங்கேணி பார்வதியை சந்திக்கவில்லை' - ஜெய்பீம் ஞானவேல் பேட்டி
- ஜெய் பீம் - சூர்யா படத்தின் சினிமா விமர்சனம்
ஆனால், இதற்குப் பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
https://twitter.com/SuryaFansTeam/status/1460200945275400192
இதற்கிடையில் பா.ம.கவின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி சூர்யாவைத் தாக்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசளிக்கப்படும் என பேட்டியளித்தது நிலைமையை இன்னும் சூடாக்கியது.
இந்த விவகாரத்தில் சூர்யா மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக #IStandwithSurya என்ற ஹேஷ்டாகின் கீழ், சூர்யாவுக்கு ஆதரவாக கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவாக ஆரம்பித்தன.
https://twitter.com/sekartweets/status/1460645985613332481
திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் வெற்றி மாறன், பாரதிராஜா, கருணாஸ், சத்யராஜ் போனறோர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
https://twitter.com/offbharathiraja/status/1292736336353546245
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று அவர் நடித்து வெளிவரவுள்ள சபாபதி திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நடிகர் சந்தானம், இது தொடர்பாக தெரிவித்த கருத்துகள் இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரிடம் செய்தியாளர்கள், "#IStandwithSurya என ட்விட்டரில் ட்ரண்ட் ஆகிறதே, பார்த்தீர்களா?" என கேட்டபோது, நான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக மும்முரமாக இருந்ததால் பார்க்கவில்லை என பதிலளித்தார்.
இதைத்தொடர்ந்து, ஜெய்பீம் தொடர்பான சர்ச்சை குறித்து நேரடியாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சந்தானம், "எதை வேண்டுமானாலும் உயர்த்திப் பேசுங்க. இன்னொருத்தரைத் தாழ்த்திப் பேச வேண்டாம். முழுப் படத்தையும் பார்க்காமல் பேசுவது தவறு. முழு படத்தையும் பார்த்துவிட்டு பேசுவதுதான் சரியான முறை. விமர்சனம் செய்யலாம் குறைகளைக் கேட்கலாம். தவறு என்றால் சரி செய்து கொள்ள வேண்டும்.
எல்லா ஜாதி மக்களும்தான் ஒன்றாகப் படம் பார்க்கிறார்கள். இதைக் கொஞ்சம் தவிர்க்கலாம். யாரை வேண்டுமானலும் உயர்த்திப் பேசலாம். மற்றவர்களைத் தாழ்த்திப் பேசக்கூடாது. ஜாதி, மதம் ஆகியவற்றைக் கடந்து எல்லோருக்கும் உரிய படமாகத்தான் இருக்க வேண்டும்" என்றார்.
அவர் இப்படிப் பேசியதையடுத்து, ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் கூடிய ஹேஷ்டேக்கை செவ்வாய்க்கிழமை மாலை முதல் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். சில, சந்தானத்தின் ரசிகர்கள் #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
https://twitter.com/dasaninfuture/status/1460851430210752516
https://twitter.com/VadiViki/status/1460886904828661767
பார்வதிக்கு 15 லட்ச ரூபாய் நிதி
இதற்கிடையில், ஜெய் பீம் திரைப்படத்தில் கொல்லப்பட்டவராகக் காட்டப்படும் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு வைப்புத் தொகையாக ரூ. 15 லட்சத்தை சூர்யா வழங்கியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன் முன்னிலையில் இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது.
நடிகர் சூர்யாவைத் தாக்கினால் ஒரு லட்ச ரூபாய் பரிசு என அறிவித்த பா.ம.க. நிர்வாகி சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கனடாவில் மோசமான சூறாவளி - வான்கூவரை இணைக்கும் சாலைகள் துண்டிப்பு
- வானியல் அதிசயம்: நீண்ட நேர பகுதி சந்திர கிரகணம் - இந்தியாவில் எங்கு தெரியும்?
- இந்தியா vs நியூசிலாந்து: ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் முன்னுள்ள சவால்கள் என்ன?
- மன நோயாளி என அடைக்கப்பட்ட ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை போராடி மீட்ட தாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications