பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

அடிமைச்சருக்கம்

(தொடர்ச்சி)

விதுரன் சொல்வது

வேறு

நன்றாகும் நெறியறியா மன்னன், அங்கு

நான்கு திசை அரசர்சபை நடுவே, தன்னைக்

கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொற் கூறிக்

குமைவதனில் அணுவளவுங் குழப்ப மெய்தான்;

சென்றாலும் இருந்தாலும் இனிஎன் னேடா?

செய்கைநெறி அறியாத சிறியாய், நின்னைப்

பொன்றாத வழிசெய்ய முயன்று பார்த்தேன்;

பொல்லாத விதி என்னைப் புறங்கண் டானால்! (9)

கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்

கருங்கல்லில் விடந்தோய்ந்த நெஞ்சுங் கொண்டோர்

படுஞ்செய்தி தோன்றுமுனே படுவர் கண்டாய்

பால்போலும் தேன்போலும் இனிய செல்லோர்

இடும்பைக்கு வழிசொல்வார்;நம்மை காண்பார்

இளகு மொழி கூறார் என் றினைத்தே தானும்-

நெடும்பச்சை மரம்போலே வளர்த்து விட்டாய்-

நினக் கெவரும் கூறியவ ரில்லை கொல்லோ? (10)

(தொடரும்...)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+