For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
அடிமைச்சருக்கம்
(தொடர்ச்சி)
விதுரன் சொல்வதுவேறு
நன்றாகும் நெறியறியா மன்னன், அங்கு
நான்கு திசை அரசர்சபை நடுவே, தன்னைக்
கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொற் கூறிக்
குமைவதனில் அணுவளவுங் குழப்ப மெய்தான்;
சென்றாலும் இருந்தாலும் இனிஎன் னேடா?
செய்கைநெறி அறியாத சிறியாய், நின்னைப்
பொன்றாத வழிசெய்ய முயன்று பார்த்தேன்;
பொல்லாத விதி என்னைப் புறங்கண் டானால்! (9)
கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்
கருங்கல்லில் விடந்தோய்ந்த நெஞ்சுங் கொண்டோர்
படுஞ்செய்தி தோன்றுமுனே படுவர் கண்டாய்
பால்போலும் தேன்போலும் இனிய செல்லோர்
இடும்பைக்கு வழிசொல்வார்;நம்மை காண்பார்
இளகு மொழி கூறார் என் றினைத்தே தானும்-
நெடும்பச்சை மரம்போலே வளர்த்து விட்டாய்-
நினக் கெவரும் கூறியவ ரில்லை கொல்லோ? (10)
(தொடரும்...)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]