பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

"யூ செட் இட்..." இந்-த வாக்-கி-யத்--தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா...?

காலையில் டைம்ஸ் ஆப் இந்தியா படிக்கும் எல்லோருக்கும் பரிச்சயமானது இந்தவாக்கியம். ஆர்.கே.லட்சுமணின் கார்ட்டூன் காலத்தின் தலைப்புதான் இது.

சங்கருக்குப் பிறகு கார்ட்டூன்களில் கொடி கட்டிப் பறப்பவர் ஆர்.கே.லட்சுமண்.நறுக்கென நடுத் தலையில் கொட்டியது போல தனது கார்ட்டூன்களில் ஒரு பன்ச்வைத்திருப்பார். இவரது கைகளில் சிக்கி அதிகம் அவதிப்படுவதுஅரசியல்வாதி-கல்தான்.

சராசரி மனிதனின் உணர்வுகளை தனது கேலிச் சித்திரங்களில் கொட்டியிருப்பார்.அரசியல் கோமாளித்தனங்கள், சமூகத்தின் குளறுபடிகள் என இவரது கார்ட்டூன்களின்களங்கள் வேறுபட்டாலும் கூட, கருத்து என்னவோ, குற்றங்களைச் சுட்டிக் காட்டுவதே.

"அரசியல்வாதிகளையும், தலைவர்களையும் நான் சரமாரியாக விமர்சிப்பதால்,மக்களுக்கு எனது கார்ட்டூன்களைப் பிடிக்கும் என்கிறார் புன்னகையுடன்ஆர்.கே.லட்சுமண்.

"மக்கள் சொல்ல நினைப்பதை எனது கார்ட்டூன்கள் சொல்லும். அவர்களின் உள்ளக்குமுறல்கள், புகார்கள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், கவலைகள், மகிழ்ச்சி...இப்படி பலஉணர்வுகளையும் எனது கேலிச் சித்திரத்தில் நான் கோடிட்டு காட்டிவிடுகிறேன்.இதுவும் கூட மக்கள் என்னை விரும்புவதற்கு ஒரு காரணம் என்கிறார்லட்சுமண்.

"இப்போதைய காலம் கார்ட்டூன்காரர்களுக்குப் பொற்காலம். எங்கே பார்த்தாலும்குழப்பங்கள், முட்டாள்தனங்கள், அநியாயங்கள், அவதூறுகள். சாதாரணகார்ட்டூனிஸ்ட் கூட இதை வைத்துப் படம் போட்டால் மிகப் பெரிய கார்ட்டூனிஸ்டாகிவிடுவார் என்று சிரிக்கிறார் லட்சுமண்.

இந்தியர்களுக்கு சிரிப்புணர்ச்சி கொஞ்சம் கம்மி என்கிறார்களே என்றால், யார்சொன்னது..? வெள்ளைக்காரன் அவிழ்த்து விட்ட பொய் மூட்டைகளில் இதுவும்ஒன்று. நம்மளோட சிரிப்பை புரிந்து கொள்ளாதவர்கள் கூறும் அபத்தமான புகார் இதுஎன்கிறார் கொஞ்சம் கோபத்துடன்.

இந்தியாவில் கார்ட்டூன் கலை எப்படி உள்ளது என்று கேட்டால், அதுகுறித்துக் கருத்துக்கூற எனக்கு உரிமையில்லை. இந்திய கார்ட்டூனை விமர்சிக்கவும் நான்விரும்பவில்லை. எதற்குப் பிரச்சினை..என்று நழுவுகிறார்.

காலையில் பேப்பர் படிக்கும் ஒவ்வொரு மனிதனும் எனது கார்ட்டூனைப் பார்த்துச்சிரிக்க வேண்டும். அப்படியே கொஞ்சம் சிந்திக்கவும் வேண்டும். மனுசனா இருந்தாசிரிக்கத் தெரிய வேண்டும். எனது லட்சியமே, எல்லோரையும் சிரிக்க வைப்பதுதான்என்கிறார் லட்சுமண்.

எனது நேரத்தை நான் எப்போதுமே வீணடிப்பதில்லை. அதிகம் வெளியில் அலைந்துநேரத்தைக் கழிக்கவும் விரும்புவதில்லை. பெரும்பாலும் தனித்தே இருக்கவிரும்புகிறேன். அப்போதும் கூட நான் தனியாக இருப்பதில்லை. அரசியலும்,அரசியல்வாதிகளும் பேய் மாதிரி என்னைச் சுற்றிக் கொண்டேதான் இருப்பார்கள்என்கிறார் சிரிப்புடன்.

நகைச்சுவையாக சிந்திக்க வேண்டுமென்றால், உணர்வுகளிலும் சிரிப்பு இருக்கவேண்டும். ஆர்.கே.லட்சுமண் சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் நிர்பந்திக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+