For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஜுலை 04, 2001
இறைவனை வேண்டுதல்
பல்லவி
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்! - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (ஓ -எத்தனை)
சரணங்கள்
1. சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்குச்
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் வழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)
2. முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையு முணரும் உணர்வமைத்தாய்
பக்தி யென் றொருநிலை வகுத்தாய் - எங்கள்
பரமா! பரமா! பரமா! (ஓ- எத்தனை)
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]