For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
முருகக் கடவுள்மீது கிளித் தூது
பல்லவி
சொல்ல வல்லாயோ? - கிளியே1
சொல்லநீ வல்லாயோ?
அனுபல்லவி
வல்லவேல் முருகன் - தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்லா)
சரணங்கள்
1.தில்லை யம்பலத்தே நடனம்
செய்யும் அமரர் பிரான் - அவன்
செல்லத் திருமகனை - இங்கு வந்து
சேர்த்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)
2.அல்லிக் குளத்தருகே - ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே - அங்கொர்
முல்லைச் செடியன்பாற் - செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென்னேயென்று (சொல்ல)
3.பாலைவனத்திடையே - தனைக்கைப்
பற்றி நடக்கையிலே - தன் கை
வேலின் மிசையாணை - வைத்துச் சொன்ன
விந்தை மொழியிகளைச் சிந்தை செய்வாயென்று (சொல்ல)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]