For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
கண்ணம்மாவின் காதல்
1. காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும்- நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்த நின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று)
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும்- நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்த நின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று)
2. நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றவனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் - நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - எண்ணம்
மாவென்ற பேர்சொலும் போழ் திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]