பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 10, 2001
(தொடர்ச்சி)
புறத்தேநான் சுமக்கின்றேன்: அகத்தி னுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சுமக்கின்றாய் நீ
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்:
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்பதாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும். (31)
சென்றதினி மீளாது: மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர், சென்றதனைக் குறித்தல் வேண்டா:
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
நின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ் வீர்:
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும். (32)
மேன்மேலும் நினைத்தழுதல் வேண்டா., அந்தோ!
மேதை.யில்லா மானுடரே! மேலும் மேலும்மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுக்கின்றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். (33)
(தொடரும்)












Click it and Unblock the Notifications