பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 10, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
9.
மணந்ததிருக்கின்றான்,
அவர்களுடைய கூட்டம் இனிது
இதனைக் காற்றுத் தேவன் கண்டான்.
காற்று வலிமை யுடையவன்.
இவன் வானவெளியைக் கலக்க விரும்பினான்.
ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை
இவன் தனது பெருமையை ஊதிப் பறை யடிக்கிறான்.
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுபோல்
கலந்தன.
காற்றுத் தேவன் பொறாமை கொண்டான்,
அவன் அமைதியின்றி உழலுகிறான்.
அவன் சீறுகின்றான், புடைக்கின்றான், குமுறுகின்றான்
ஓலமிடுகின்றான், சுழலுகின்றான், துடிக்கின்றான்,
ஓடுகின்றான், எழுகின்றான், நிலையின்றிக் கலங்குகின்றான்.
வெளியும், ஒளியும் மோனத்திலே கலந்து நகைசெய்கின்றன.
காற்றுத் தேவன் வலிமை யுடையவன்.
அவன் புகழ் பெரிது. அப் புகழ் நன்று.
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தவை.
அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன.
அவை வெற்றியுடையன.
ஞாயிறே,. நீதான் ஒளி தெய்வம்,
நின்னையே வெளிப் பெண் நன்கு காதல் செய்கிறாள்
உங்கள் கூட்டம் மிக இனிது,
நீவிர் வாழ்க.
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications