பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
திருக்காதல்
திருவே! நினைக்காதல் கொண்டேனே - நினது திரு
உருவே மறவாதிருந் தேனே- பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே - நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே - இடை நடுவில்
பையச் சதிகள் செய் தாயே! - அதனிலு மென்
மையல் வளர் தல்கண்டாயே - அமுதமழை
பெய்யக் கடைக்கண்நல் காயே - நினதருளில்
உருவே மறவாதிருந் தேனே- பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே - நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே - இடை நடுவில்
பையச் சதிகள் செய் தாயே! - அதனிலு மென்
மையல் வளர் தல்கண்டாயே - அமுதமழை
பெய்யக் கடைக்கண்நல் காயே - நினதருளில்
உய்யக் கருணை செய்வாயே - பெருமைகொண்டு
வையந் தழைக்கவைப் பேனே - அமரயுகஞ்
செய்யத் துணிந்து நிற் பேனே - அடியெனது
தேனே! எனதிரு கண்ணே - ஏனையுகத்து
தானே! வருந் திருப் - பெண்ணே!
(தொடரும்)












Click it and Unblock the Notifications