பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
வேய்ங்குழல்
ராகம்- ஹிந்துஸ்தான் தோடி
தாளம் - ஏகதாளம்
எங்கிருந்து வருகுவதோ ? - ஒலி
யாவர் செய்கு வதோ? - அடி தோழி
தாளம் - ஏகதாளம்
எங்கிருந்து வருகுவதோ ? - ஒலி
யாவர் செய்கு வதோ? - அடி தோழி
1.குன்றி னின்றும் வருகுவதோ ?- மரக்
கொம்பி னின்றும் வருகுவதோ? - வெளி
மன்றி னின்று வருகுவதோ? - என்றன்
மதி மருண்டிடச் செய்குதடி! - இஃது (எங்கிருந்து)
2.அலையொ லித்திடும் தெய்வ - யமுனை
யாற்றினின்றும் ஒலிப்பதுவோ? - அன்றி
இலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்ன முறைப்போல்? (எங்கிருந்து)
3.காட்டினின்றும் வருகுவதோ? - நிலாக்
காற்றைக் கொண்டு தருகுவதோ? - வெளி
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?
நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து)
4.பறவை யேதுமொன் றுள்ளதுவோ! - இங்ஙன்
பாடுமோ அமுகக்கனற் பாட்டு?
மறைவினின்றுங் கின்னர ராதியர்
வாத்தியத் தினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து)
5.கண்ணனூதிடும் வேய்ங்குழல் தானடீ!
காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து)
(தொடரும்)












Click it and Unblock the Notifications