பாரதி பக்கம்
இரண்டாவது காதல் - லட்சுமி காதல்
தாளம்: திஸ்ர ஏகம்
இந்த நிலையினிலே - அங்கொர்
இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள் - அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
சிந்தை திறைகொடுத்தேன் - அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னான், மற்றும்
அந்தத் தின முதலா - நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேனம்மா! (5)
புன்னகை செய்திடுவாள் - அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்:சற்றென்
முன்னின்று பார்த்திடுவாள் - அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்: பின்னர்
என்ன பிழைகள் கண்டோ - அவள்
என்னைப் புறக்கணித் தேகிடு வாள், அங்கு
சின் னமும் பின்னமுமா - மனஞ்
சிந்தியுளமிக நொந்திடு வேனம்மா! (6)
காட்டு வழிகளிலே - மலைக்
காட்சியிலே, புனல் வீழ்ச்சியிலே, பல
நாட்டுப் புறங்களிலே -நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே, சில
வேட்டுவர் சார்பினிலே - சில
வீர ரிடத்திலும், வேந்த ரிடத்திலும்,
மீட்டு மவள் வருவாள் - கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டுபோமம்மா! (7)












Click it and Unblock the Notifications