For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
மார்ச் 24, 2001
சுயசரிதை
(தொடர்ச்சி)
மாத ராளிடைக் கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்:
நினைவை யேயிம் மணத்திற் செலுத்திலேன்,
முற்றொ டர்பினில் உண்மை யிருந்ததால்
மூண்ட பின்னதொர் கேளியென் றெண்ணினேன்.
கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன்
காத லொன்று கடமையொன் றாயின! (36)
மதனன் செய்யும் மயக்க மொருவயின்:
மாக்கள் செய்யும் பிணிப்புமற் றாாேவயின்:
இதனிற் பன்னிரண் டாட்டை யிளைஞனுக்
கென்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்?
எதனி லேனுங் கடமை விளையுமேல்
எத்து யர்கள் உழன்றுமற் றென்செய்தும்
அதனி லுண்மையோ டார்ந்திடல் சாலுமென்று
அறம்வி திப்பதும் அப்பொழு தோர்ந்திலேன். (37)
சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள்
சகுன மந்திரந் தாலி மணியெலாம்
யாத்தெ னைக் கொலை செய்தன ரல்லது
யாது தர்ம முறையெனல் காட்டிலர்,
தீக்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல்
செய்து மற்றவை ஞான நெறியென்பர்:
மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்
மூடப் பிள்ளை அறமெவண் ஓர்வதே. (38)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]