For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
பிப்ரவரி 25, 2001
தேசிய கீதங்கள்
ஜாதீய கீதம் -1
1.இனியநீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
2.வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை! (வந்தே)
3.முப்பது முக்கோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்துவக் காற்றவும்
திறனிலால் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையார் அருவினை போற்றி!
பொருந்தவர் படையுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]