For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரவின் நரை நூல் வெளியீட்டு விழா

By Staff
Google Oneindia Tamil News

Bookகவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் கவிதை நூல் வெளியீட்டு விழா, வரும் 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
நவீன தமிழ்க் கவிதை வாசகர்களில் பெரும்பாலோனோர்க்கு பரிச்சயமான பெயர் பிச்சினிக்காடு இளங்கோ. பல்வேறு இலக்கியஇதழ்களிலும், இணைய பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதி வரும் இளங்கோ, தன்னுடைய இரண்டாவது கவிதை தொகுப்பை வெளியிடஇருக்கிறார்.

இரவின் நரை என்ற பெயரிலான இந்த நூல் வெளியீட்டு விழா, சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மொழி மையத்தில் வரும் 9ம் தேதிமாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

கவிஞர் க.து.மு. இக்பால் நூலை வெளியிட, அதை ஏர் இந்தியா நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய வட்டார நிர்வாகி சுலேகாஸ்ரீவத்ஸவா பெற்றுக் கொள்கிறார்.

வெண்பாச் சிற்பி வி.இலக்குவனம் வாழ்த்துக் கவிதை வாசிக்கிறார். எழுத்தாளர் ரமாசங்கரன் வாழ்த்துரை வழங்குகிறார்.டாக்டர் சித்ரா சங்கரன் சிறப்புரை ஆற்றுகிறார்.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X