For Quick Alerts
For Daily Alerts
Just In
எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் மரணம்
சென்னை: பழம்பெரும் எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் சென்னையில் இன்று மரணமடைந்தார்.
லா.ச.ரா என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் லா.ச.ராமாமிர்தம். 92 வயதாகும் லா.ச.ரா., நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.
லா.ச.ராவின் மரணம், இலக்கிய உலகுக்கும், தமிழ் எழுத்துலகுக்கும் பெரிய இழப்பு என்றால் அது மிகையாகாது.
சிந்தா நதி, கல் சிரிக்கிறது, கங்கா, நான், செளந்தர்ய, விளிம்பில் உள்ள பல நாவல்கள் லா.ச.ராவின் முத்திரை நூல்களாகும்.
Comments
Story first published: Wednesday, December 19, 2007, 18:04 [IST]