குமரி வள்ளுவர் சிலைக்கு நாளை முதல் மீண்டும் படகு
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நாளை முதல் மீண்டும் செயல்பட உள்ளது.
கன்னியாகுமரியில் உலகப்புகழ் பெற்ற திருவள்ளுவர் சிலை உள்ளது. இந்த சிலையைக் காண தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் கடல் காற்றின் அரிப்பினால் திருவள்ளுவர் சிலைக்கு பாதிப்பு ஏற்பட்டது. இனால் உப்புக் காற்றின் அரிப்பில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு ரூ 76 லட்சம் செலவில் கடந்த ஜூன் மாதம் 4 ம் தேதி முதல் ரசாயன கலவை பூச்சும் பணியும், கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகளும் மற்ற பணிகளும் துவக்கப்பட்டது. இதனால் படகு போக்குப வரத்து நிறுத்தப்பட்டது.
அக்டோபர் மாதம் பணிகள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி பணி முடிவடையாததால் படகு சவாரியை தொடங்குவதில் காலதாமதம் ஆனது.
இதனால் கன்னியாகுமரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி நாளை முதல் துவங்கப்படும் என்று சுற்றுலாத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications