மகாத்மா காந்தி '150'!
இதில், மகாத்மா காந்தி மிகத் தீவிரமாக போராட்டம் நடத்திய நாடான பிரிட்டனும் அடங்கும்.
இங்கிலாந்தில், அந்த நாட்டு ராஜ வம்சத்தைச் ேசராத ஒருவருக்கு தபால் தலை வெளியிட்டிருப்பது, காந்திக்கு மட்டும்தான். ராஜ குடும்பத்தினரின் முகங்கள்தான் முன்பு பிரிட்டன் தபால்தலைகளில் இடம் பெற்று வந்தன. அதை மாற்றிய முதல் மனிதர் - நம்முடைய மகாத்மா மட்டுமே.
உலக அளவில் 150 நாடுகளில் மகாத்மா காந்தியின் தபால்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது எந்த ஒரு உலக தலைவருக்கும் கிடைக்காத பெருமையாகும். அலகாபாத்தைச் ேசர்ந்த வியாபாரி அனில் ரஸ்தோகி என்பவர் இந்த 150 நாட்டு காந்தி தபால்தலைகளையும் சேகரித்து வைத்து சாதனை படைத்துள்ளார்.
50 வயதாகும் ரஸ்தோகி, தனது 15வது முதலே இந்த தபால் தலை கலெக்ஷனில் ஈடுபட்டுள்ளாராம். தபால்தலைகள் மட்டுமல்லாது, தபால் அட்டைகள், கவர்கள் உள்பட காந்தி சம்பந்தமான அனைத்தையும் சேகரித்து வருகிறார் ரஸ்தோகி.
பூட்டானில் வெளியிடப்பட்ட பிளாஸ்டிக் காந்தி ஸ்டாம்புகளும் இதில் அடக்கம். அதேபோல மார்ட்டின் லூதர் கிங், காந்தி, ரூஸ்வெல்ட் ஆகியோருடன் காந்தி படத்ைத இணைத்து டொமினிக்கன் நாடு வெளியிட்ட அரிய வகை ஸ்டாம்பும் இவர் வசம் உள்ளது.
150 நாடுகளின் தபால்தலைகளில் இடம்பெற்றுள்ள நம்முடைய தேசத்தின் முகவரியின் 140வது பிறந்த நாளை, அவரது அகிம்சை உள்ளிட்ட உயரிய தத்துவங்களை கடைப்பிடித்து அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவோம்.