தமிழில் மட்டுமே அரசாணைகள்!
தலைமை செயலகத்தில் வெளியிடப்படும் ஆணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ் ஆட்சி மொழி ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தலைமை செயலகத்தில் மண்டல துணை இயக்குனர்கள், மாவட்ட உதவி இயக்குனர்கள், தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆகியோர் இணைந்து ஒரே நேரத்தில் தமிழ் ஆட்சி மொழி ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இனி தலைமை செயலகத்தில் வெளியிடப்படும் ஆணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்றும், சுற்றாணை குறிப்புகள், கருத்துரைகள், கணினியில் பயன்படும் மென் பொருள்கள் ஆகியவை முழுமையும் தமிழில் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தலைமை செயலாளர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயலகத்தில் தமிழ் பயன்படுத்தப்படவும், துறைச் செயலாளர்கள் தங்களது துறைகளில் ஆட்சிமொழி தமிழ் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
துறை அமைச்சர்கள் அனுமதியின்றி ஆங்கிலத்தை அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது.
இந்த உத்தரவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், தலைமை செயலகத்துறைகளில் தமிழ் ஆட்சி மொழி ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது.
மண்டலத்துணை இயக்குனர்கள், மாவட்ட உதவி இயக்குனர்கள் ஆகியோர் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு நேற்று எழும்பூர் தமிழ் வளர்ச்சி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலாளர் கோ.சந்தானம், தமிழ் வளர்ச்சி இயக்குனர் ராசேந்திரன், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் வை.கண்ணபுரக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிலையி்ல் தலைமைச் செயலகத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆய்வுக் கூட்டம் 26ம் தேதி (இன்று) முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் முதற்கட்டமாக 17 துறைகளின் அதிகாரிகள் பங்கேற்பர் என்று கூறப்பட்டுள்ளது.
-
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ












Click it and Unblock the Notifications