திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தமிழகத்தில் பிரசத்திப் பெற்ற தீபத் திருவிழா திருவண்ணாமலை தீபத் திருவிழா.
இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.
தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அண்ணாமலையார் கோவிலில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது, பஞ்சமூர்த்திகள், வெள்ளி விமானங்களில் மாடவீதியை வலம் வந்தனர்.
7ம் தேதி வெள்ளித் தேர் பவனியும், 8ம் தேதி மகாரதம் தேரோட்டமும் நடைபெறும். 9ம் தேதி மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய விழாவான மகாதீப திருவிழா 11ம் தேதி நடைபெறுகிறது.
அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலையே 2,688 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
இதைக்காண பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications