கொல்கத்தாவில் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை குறைகிறது!

கொல்கத்தாவில் வசித்து வரும் பி.டி.நாயர் பிரபலமான வரலாற்று நிபுணர் ஆவார். கொல்கத்தாவின் வரலாறு, சமூகம், அரசியல், மதம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து 42 நூல்களை இவர் எழுதியுள்ளார்.
கொல்கத்தாவின் நடமாடும் என்சைக்ளோபீடியா எனவும் இவர் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் எழுதிய ஹிஸ்டரி ஆப் கல்கத்தா என்ற ஆய்வு நூல் மிகச் சிறந்த ஆய்வு நூலாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் பல்வேறு சமூகத்தினரின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக நாயர் கூறியுள்ளார். குறிப்பாக தமிழர்களும், மலையாளிகளும் கொல்கத்தாவிலிருந்து வெளியேறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாயர் கூறுகையில், ஒரு காலத்தில் கொல்கத்தாவை நிர்மாணித்தவர்கள் கிரேக்கர்களும், ஆர்மீனியர்களும், யூதர்களும்தான். அவர்களது கட்டடக் கலைக்கு சிறப்பாக ஏராளமான கட்டடங்கள் இன்றும் கொல்கத்தாவுக்கு எழில் கூட்டிக் கொண்டுள்ளன. ஆனால் இன்று கிரேக்கர்கள் கொல்கத்தாவில் ஒருவர் கூட இல்லை.
யூதர்களின் எண்ணிக்கை 25 ஆக சுருங்கிவிட்டது. ஆர்மீனியர்களின் எண்ணிக்கை வெறும் 600 ஆக உள்ளது.
இன்னொரு முக்கிய சமூகமான தமிழர்களும், மலையாளிகளும் கூட இங்கிருந்து வேகமாக வெளியேறி வருகின்றனர். ஒரியர்களும் கூட கொல்கத்தாவை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள் வசம் இருந்து வந்த பல்வேறு சொத்துக்களும், சர்ச்சுகளும் விற்கப்பட்டு விட்டன. பலவற்றை, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தன் வசம் எடுத்துக் கொண்டு விட்டது.
நகரிலேயே மிகவும் பழமையான கட்டடம் என்ற பெருமையைப் பெற்ற பிரபோர்ன் சாலை சர்ச் 1724ம் ஆண்டு கட்டபப்ட்டது. ஆர்மீனியர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த உதாரணமாக இது விளங்குகிறது.
முதன் முதலில் கொல்கத்தாவிலிருந்து மொத்தமாக வெளியேறியவர்கள் கிரேக்கர்கள்தான். அவர்கள் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச் சென்ற சர்ச்சும், பிற சொத்துக்களும் அரசுக்கு தானமாக வழங்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் நாயர்.
இப்போது, தமிழர்களும், மலையாளிகளும் வேகமாக வெளியேறுவதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் நாயர் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications