பத்திரிகை தின பேச்சு போட்டி: வெற்றி பெற்ற மாணவர்கள்
தேசிய பத்திரிகை தின பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பரிசுகள் வழங்கினார்.
மத்திய அரசின் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தொடங்கப்பட்ட தினம் ஒவ்வொரு வருடமும் தேசிய பத்திரிகை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பத்திரிகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 'ஊடகம் மக்களின் குரலாக சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும்' என்ற தலைப்பில் இந்தப் போட்டிகள் நடந்தன.
கல்லூரி கல்வி இயக்கத்தின் மூலம் முதலில் மாவட்ட அளவிலும் பின்னர் மாநில அளவிலும் பேச்சுப் போட்டிகள் நடந்தன.
மாநில அளவில் மற்றும் சென்னை மாவட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற கீழ்க்கண்ட கல்லூரி மாணவ, மாணவியருக்கு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னை தலைமைச் செயலகத்தில் இரு தினங்களுக்கு முன் பரிசுகளை வழங்கினார்.
வெற்றிப் பெற்றவர்கள் விவரம்:
தமிழ் பேச்சுப்போட்டி:
முதல் பரிசு எஸ்.கௌசல்யா, மாநிலக் கல்லூரி, சென்னை.
2ம் பரிசு ச.ராஜ்முகமது, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி.
3ம் பரிசு முகமது ரிஸ்வி, சையது அகமது அறிவியல் கலைக்கல்லூரி கீழக்கரை.
ஆங்கிலப் பேச்சுப் போட்டி:
முதல் பரிசு கே.ராமச்சந்திரன், ஸ்ரீமத் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி.
2ம் பரிசு ஏ.சசிகுமார், மாநிலக் கல்லூரி, சென்னை.
3ம் பரிசு சுரேஷ்குமார், திருவள்ளுவர் அறிவியல் கலைக் கல்லூரி, கடலூர்.
சென்னை மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்கள்:
தமிழ் பேச்சுப் போட்டி:
முதல் பரிசு எஸ்.கௌசல்யா, மாநிலக் கல்லூரி சென்னை.
2ம் பரிசு அ.ப.ராசா, ஊடகவியல்துறை, சென்னை பல்கலைக்கழகம்.
3ம் பரிசு சித்திக் ஜீனத் நிஷா, தமிழ் இலக்கியத்துறை, சென்னை பல்கலைக்கழகம்
ஆங்கிலப் பேச்சுப் போட்டி:
முதல் பரிசு ஏ.சசிகுமார், மாநிலக் கல்லூரி, சென்னை
2ம் பரிசு எஸ்.சதீஷ், குருநானக் கல்லூரி, சென்னை
3ம் பரிசு செல்வி ஏ.அமலஜோதி, ராணி மேரிக் கல்லூரி, சென்னை.
(பத்திரிகை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது)