குமரி வள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச்சு தொடக்கம்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை கடந்த 2000ம் ஆண்டின் முதல் நாளன்று முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிலை கடல் காற்றினாலும், மழை மற்றும் வெயிலினாலும் சிலை மற்றும் சிலை அமைந்துள்ள மண்டபம், யானை சிற்பங்கள் குறட்பாட்கள் பாதிக்கப்பட்டு பொழிவிழந்து காணப்பட்டது.
சிலையை பாதுகாக்க மூன்றாண்டுக்கு ஒரு முறை சிலை சுத்தப்படுத்தப்பட்டு பாலிசிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு இந்த கலவை பூசப்பட்டது.
தற்போது மீண்டும் பூச தமிழக அரசு 76 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ரசாயான கலவை பூசுவதற்காக நேற்று முதல் அக்டோபர் மாதம் 16ம் தேதி முடிய சுமார் நான்கரை மாதம் திருவள்ளுவர் சிலையை சுற்று பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிலையை சுற்றி இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கும் முதல் கட்ட பணி தொடங்கியது.












Click it and Unblock the Notifications