உத்தமர் என்பது தமிழ்ச் சொல் அல்ல: பத்திரிக்கையாளர் கஸ்தூரி ரங்கன்
கஸ்தூரி ரங்கனின் ஒரு மனிதன் மகாத்மா ஆன கதை என்னும் நூல் வெளியீட்டு விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக இந்த நூலை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அப்போது கஸ்தூரி ரங்கன் பேசுகையில், காந்தி பற்றி ஏற்கனவே பல புத்தகங்கள் வெளி வந்திருந்தாலும், காந்தியின் வாழ்க்கையை நான் உள்வாங்கி கொண்ட விதத்தை இந்த புத்தகத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறேன்.
புத்தருக்கு பிறகு இந்தியாவில் தோன்றிய மிகப்பெரிய ஆன்மீகவாதி காந்தி. பாரிஸ்டர் பட்டம் பெற்று கோட் சூட்டில் வலம் வந்த காந்தி, தமிழகம் வந்தபோது, மேலாடை இல்லாமல் ஏழை விவசாயிகளை பார்த்து எளிமையான உடைக்கு மாறினார். அன்று முதல் அவர் மகாத்மா என்று ரவீந்தரநாத் தாகூரால் அழைக்கப்பட்டார்.
எல்லாவற்றையும் மொழி பெயர்ப்பு செய்யும் தமிழக அரசு மகாத்மா காந்தியை உத்தமர் காந்தி என்று அழைக்கிறது. உத்தமர் என்பது சமஸ்கிருத சொல். எனவே உத்தமர் காந்தியை மகாத்மா காந்தி என்று தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எல்லா மொழிகளிலும் மகாத்மா என்று காந்தி குறிப்பிடப்படுவதைப் போல் தமிழிலும் மகாத்மா என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கூறினார். எனவே தமிழக அரசு உத்தமர் என்ற சொல்லுக்கு பதிலாக மகாத்மா என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
ரஷ்யா, பிரான்ஸ் உலக போன்ற நாடுகளில் மகாத்மாக காந்தி என்றே குறிப்பிடுகின்றனர் என்றார்.