எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும்: பிரபஞ்சன்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவர் தொ. பரமசிவன் எழுதிய வழித்தடங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
நூலின் முதல் பிரதியை எழுத்தாளர் பரபஞ்சன் பெற்றுக் கொண்டு பேசுகையி்ல்,
எழுத்தாளர்கள் புதிய சிந்தனை கொண்டவர்கள். புதிய தலைமுறையினருக்கு வழிக்காட்டக் கூடியவர்கள். நூலாசிரியர் தொ. பரமசிவனின் வழித்தடங்கள் நூல், புதிய பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது.
சங்க இலக்கியத்தை அவர் 4 பிரிவுகளாக பிரித்து கருத்துக்களை தந்துள்ளார். தல ஆய்வு செய்து நூலை எழுதியுள்ளார்.
இதுபோன்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும் என்றார் பிரபஞ்சன்.
நிகழ்ச்சியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பேராசிரியர் சுப. ரவீந்திரநாதன், டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் பிரேம், கவிஞர் தேவந்திர பூபதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலர் நாறும்பூநாதன் ஆகியோரும் வாழ்த்திப் பேசினர்.












Click it and Unblock the Notifications