பள்ளி விழாவில் ஜெயேந்திரர்
சென்னை திருவான்மியூர் ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் துவக்கின.
நிகழ்ச்சியில் அருளாசி வழங்கிய ஸ்ரீ ஜெயேந்திரர், மாணவ, மாணவியருக்கு பள்ளி நிர்வாகம் பல்வேறு உதவித் தொகை, ஊக்கப் பரிசு மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்கி ஊக்குவிப்பதைப் பாராட்டினார்.
அவர் பேசுகையில், வெறும் பாடங்களை மற்றும் கற்றுத் தராமல், ஒழுக்கத்தையும், நேர்மையையும் கற்றுத் தருவது தான் ஒரு கல்வி நிலையத்தின் தலையாய கடமை. அந்த வகையில் ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி கடந்த 25 ஆண்டுகளாக ஆற்றிவரும் சேவை மகத்தானது.
எந்த வித நன்கொடையையும் வசூலிக்காமல், மாணவ, மாணவியரை பள்ளியில் சேர்த்துக் கொள்வது போதாதென்று, இத்தனை குழந்தைகளுக்கு உதவித் தொகை, ஊக்கத் தொகை, இலவச சீருடை என்று வழங்கி வருகிறது இந்தப் பள்ளி என்பது பாராட்டுக்குரிய விஷயம். காலாகாலத்துக்கும் அழியாத தலைசிறந்த கல்விச்சாலையாக இந்தப் பள்ளிக் கூடம் பல நூற்றாண்டு விழாக்களைக் காண வேண்டும் என்றார்.
வெள்ளி விழா நிகழ்ச்சிகளை தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்,
மாணவர்களே, நீங்கள் படிப்பது ஆங்கில வழிப்பாடம் புகட்டும் மெட்ரிகுலேஷன் பள்ளியாக இருக்கலாம். ஆனால், தமிழ்த்திருநாடு தன்னை பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா; அமிழ்தினும் இனியதடி பாப்பா, நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா...' என்று மகாகவி பாரதி சொன்ன வரிகளை தயவு செய்து மறந்துவிடாதீர்கள். தேம துரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்யுஙகள்' என்றார்.
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.என். வள்ளிநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் ரமாபிரியா நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications