கலைவாணர் நூற்றாண்டு விழா: ஜேப்பியார் தலைமையில் கமிட்டி
சென்னை: சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை நகைச்சுவையாக திரைப்படங்களில் வழங்கிய என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் பலர் இக்குழுவின் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து நிருபர்களிடம் ஜேப்பியார் தெரிவித்ததாவது:
என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டு விழா வரும் நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. அவரது கலைச் சேவை, நகைச்சுவைத் திறன், சமூக சிந்தனையைப் போற்றும் வகையிலும் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
என்.எஸ்.கே. மருமகனும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் முன்னாள் இயக்குநருமான வரதராஜன் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
என்.எஸ்.கே. நூற்றாண்டை ஒட்டி நவம்பர் மாதம் கலை விழா, நகைச்சுவைக் கவியரங்கம், கலைவாணர் பட்டி தொட்டி எங்கும் நிகழ்த்திய வில்லுப்பாட்டு ஆகியவை இந்த விழாவில் இடம்பெறும். விழாவில் முன்னணிக் கலைஞர்கள், பிரமுகர்கள் பங்கேற்பர் என்றார் ஜேப்பியார்.












Click it and Unblock the Notifications