பழம்பெரும் நகைகள் கண்காட்சியில் 100 வருட தங்கத் தாலி!

Subscribe to Oneindia Tamil

Jewellary
சென்னை: மைலாப்பூர் என்.ஏ.சி. நகைக்கடையில் நகை கண்காட்சி நேற்று தொடங்கியது. உலக தங்க கவுன்சில் துணை தலைவர் கே.ஷிவ்ராம் இந்த நகைக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இங்கு பெண்களை கவரும் வகையில் 100 வருடங்களுக்கு முன்பு உள்ள பழமையான நகைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு கலை அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட செட்டிநாட்டுத் தாலி விற்பனைக்கு உள்ளது.

இந்த தாலியின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். அந்த காலத்தில் அரச குடும்பத்தில் உள்ள பெண்கள் அணிந்த ராணி மாலை ஒன்றும் இக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

இந்த ராணி ஆரத்தில் தெய்வீகப் பறவைகளாக கருதப்படும் மயில், அன்னம் ஆகிய பறவைகள் இடம் பெற்றுள்ளன. இதன் விலை ரூ.60 லட்சம் ஆகும்.

90 வருடங்களுக்கு முன்பு தமிழக பெண்கள் தங்கள் கூந்தலில் விரும்பி அணிந்த ஜடநாகமும் விற்பனைக்கு உள்ளது. இந்த ஜடநாகத்தில் நல்லபாம்பு, யானை, புலி ஆகிய உருவங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.50 லட்சம் ஆகும்.

மேலும் கண்காட்சியில் நெத்திச் சுட்டி, காதணிகள், நெக்லஸ்கள், நீண்ட சங்கிலிகள், ஒட்டியாணங்கள் என்று அந்தக் கால பாரம்பரிய நகைகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. நகை கண்காட்சி ஜுலை மாதம் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது என்று என்.ஏ.சி. நகைகடை அதிபர் அனந்த பத்மநாபன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+