தமிழ் 'ஸ்பெக்ட்ரம்' இதழ் விரைவில் வெளியீடு
திருச்சி: மேலை நாடுகளில் வெளியாகும் 'ஸ்பெக்ட்ரம்' என்ற அறிவியல், தொழில்நுட்ப இதழை தமிழில் மொழி பெயர்த்து தமிழ் 'ஸ்பெக்ட்ரம்' என்ற இதழ் சில மாதங்களில் வெளியிடப்படவுள்ளது என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ கூறியுள்ளார்..
பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், நாட்டிலேயே முதன் முறையாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டு கால எம்.டெக்., 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த எம்.ஏ. வரலாறு ஆகிய வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
திறமையுள்ள மாணவர்கள் எம்.டெக். வகுப்பை 5 ஆண்டு காலத்திலும், எம்.எஸ்சி., எம்.ஏ. வகுப்புகளை 4 ஆண்டு காலத்திலும் படித்து முடித்துக் கொள்ளலாம்.
மேலும், 5 ஆண்டு காலம் தொடர முடியாத மாணவர்கள் 3 ஆண்டுகளில் இளநிலைப் பட்டம் மட்டும் பெற்றுச் செல்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இதேபோல, பொது மதிப்பீட்டுப் பாடத் திட்டத்தில் (சி.பி.சி.எஸ்.) படிக்கும் மாணவர்கள் 3 ஆண்டு காலப் படிப்பை 5-வது பருவத் தேர்வுடனோ அல்லது ஓராண்டுக்கு முன்பாகவோ முடித்துக் கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் அந்தந்த தாய் மொழிகளிலேயே மொழி பெயர்த்து இதழாக வெளியிடப்படுகிறது. இது, அங்குள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்தப் பணியை இப்பல்கலைக்கழகம் ஏற்றுச் செய்யவுள்ளது. மேலை நாட்டில் வெளியாகும் 'ஸ்பெக்ட்ரம்' என்ற அறிவியல், தொழில்நுட்ப இதழில் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெறும்.
இந்த இதழை மொழி பெயர்த்து தமிழ் 'ஸ்பெக்ட்ரம்' என்ற இதழ் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணி சில மாதங்களில் தொடங்கவுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் ரூ. 58 கோடி நிதியுதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 4,000-க்கும் அதிகமான கட்டுரைகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளன. இவற்றைத் தொகுத்து அச்சடித்து வெளியிடப்படவுள்ளது.
ஆனால், இந்தக் கட்டுரைகளெல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. எனவே, இவற்றையும் மொழி பெயர்த்து, 'பாரதிதாசன் அறிவியல் தொழில்நுட்ப இதழ்' வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு கட்டுரையும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இடம்பெறும்.
இந்த இதழில் பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சார்ந்த ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை அளிக்கலாம். ஆனால், கட்டுரை தரமானதாக இருக்க வேண்டும்.
கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காகப் பல்கலைக்கழக எல்லைக்கு உள்பட்ட 8 மாவட்டங்களிலும் தலா ஒரு ஆலோசனை மற்றும் வழிகாட்டி மையம் அமைப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிக் குழுவிடம் ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மாவட்டத்திலாவது அமைக்கப்பட்டுவிடும்' என்றார் பொன்னவைக்கோ.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்?












Click it and Unblock the Notifications