காந்தீயத்தில் மாணவர்கள் ஆர்வம்
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் காந்தீய கொள்கை பற்றிய பாடப் பிரிவில் சேர்ந்து படிப்பதற்கு இப்போது மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் காந்தீய கொள்கை பற்றிய பட்ட மேற்படிப்பு வகுப்பில் 20 இடங்கள் உள்ளன. அந்த 20 இடங்களுக்கு இதுவரை 200 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
இந்த பாடப் பிரிவுக்கு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தால், இடங்களின் எண்ணிக்கையை 25 ஆக உயர்த்த அந்த துறையின் தலைவர் சர்மா முடிவுசெய்துள்ளார்.
இப்போதைய அரசியல் சூழ்நிலையைக் கண்டு நிலைமைகளைக் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ள இளைஞர் சமுதாயம், காந்தீய கொள்கை பற்றி அறிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் வேலைவாய்ப்புக்கும் காந்தியக் கொள்கைகள் பெரிதும் உதவுவதை மிகத் தாமதமாக மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
காந்திய வழியில் ஆரம்பிக்கப்படும் பல தொழில்கள் உள்ளூர் விவசாயம் மற்றும் தொழில்களை வளர்ப்பதற்கும், சுற்றுச் சூழலுக்கும் மிக இணக்கமாக உள்ளதையும் இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பது சந்தோஷமாக உள்ளது என்கிறார் பேராசிரியர் சர்மா.












Click it and Unblock the Notifications