தகடூர் வனப்பிரியனுக்கு கலைஞர் விருது
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: வனத்துறையில் பணியாற்றும் வனப்பிரியனுக்கு கலைஞர் விருதை கதர்த் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.
வனம், இயற்கை மேன்மை குறித்து அவர் எழுதிய நூலுக்காக, சென்னையில் உலக நட்புறவு மையம் சார்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.
விழாவில் அரிமா சங்க நிர்வாகி டாக்டர் ஜி.மணிலால், உலக நட்புறவு மையப் பொதுச்செயலர் டாக்டர் வே.மு.கலைநாயகம், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உலக இயற்கை ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவியுள்ள தகடூர் வனப்பிரியன், 3 கவிதை நூல்கள் உள்பட 20-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications