கைவினை தொழிற்சங்கம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கரூர்: விவசாயிகளுக்கு அரசு உழவர் சந்தை அமைத்து கொடுத்ததை போல கைவினை பொருட்களை விற்பனை செய்ய தனி சந்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கைவினைஞர் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரூரில் கைவினைஞர் தொழிற்சங்கம் கூட்டம், அதன் பொது செயலாளர் விசு.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் கூறியதாவது

கைவினைஞர் நல வாரியத்தில் தமிழக அரசுக்கு ஜால்ரா போடுபவர்கள் மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கைவினை தொழில் செய்யாதவர்களை வாரிய உறுப்பினராக நியமித்திருப்பது கண்டிக்கதக்கது.

வாரியம் மூலம் அரசு வழங்கும் நிதியுதவி, பென்ஷன் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். வாரியத்தை வருவாய்த் துறைக்கு மாற்றியதை உடனே ரத்து செய்ய வேண்டும்.

இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாக கண்டிக்கதக்கது. இப்பிரச்சனையில் மீனவர்களின் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு அரசு உழவர் சந்தை அமைத்து கொடுத்ததை போன்று கைவினை பொருட்களை விற்பனை செய்ய தனி சந்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+