ஆஸ்திரேலிய கல்லூரிகளில் சேருவது எப்படி? - சென்னையில் கண்காட்சி
சென்னை: ஆஸ்திரேலிய உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருநாள் வழிகாட்டி கல்வி கண்காட்சி சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி நடக்கிறது.
ஐ.டி.பி. நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற 30 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் பல்வேறு மேற் படிப்புகள், மாணவர் சேர்க்கை முறை, கல்வி உதவித்தொகை, விசா நடைமுறை உள்பட அனைத்து அம்சங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கும் மாணவர்களும் பெற்றோரும் விளக்கம் பெறலாம்.
இந்த கல்வி கண்காட்சியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயரை 044-4285 7041 (44 வரை) என்ற தொலைபேசி எண்ணில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications