பெரியார் படைப்புகள்: வெளியிட பெரியார் தி.க.வுக்கு தடை
சென்னை: பெரியாரின் கட்டுரைகள், எழுத்துக்கள் உள்ளிட்டவற்றை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பெரியார் திராவிடர் கழகம் இந்த நூல்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், குடியரசு பத்திரிகையில் வந்த பெரியாரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள், எழுத்துக்களை புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிடப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் கடந்த 1952ம் ஆண்டு பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம் என்ற அமைப்பை துவங்கினார். அதில் 1925ல் தொடங்கப்பட்ட குடியரசு பத்திரிகையில் வெளியான தன்னுடைய கட்டுரைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை நூல்களாக அச்சிட்டு இந்த அறக்கட்டளை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று பெரியார் கூறியுள்ளார்.
மேலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அனாதை, வயதான, ஆதரவற்ற இல்லம் அமைத்து அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் 1982ல் குடியரசு பத்திரிக்கையின் நகல்கள் எடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் இந்த நூல்கள் திருடப்பட்டுள்ளன. தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்திடமிருந்து இதன் நகல்களை தாங்கள் பெற்றதாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் வார பத்திரிகையில் பேட்டியளித்துள்ளார். இது முற்றிலும் பொய்யானது.
ஆகவே குடியரசு பத்திரிகையில் வெளியான பெரியாரின் கட்டுரைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை பெரியார் திராவிடர் கழகம் புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிட தடைவிதிக்க வேண்டும். நஷ்ட ஈடாக ரூ.15 லட்சம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், புத்தகம், சிடி வெளியிட தடைவிதித்ததோடு, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications