பெரியார் படைப்புகள்: வெளியிட பெரியார் தி.க.வுக்கு தடை
சென்னை: பெரியாரின் கட்டுரைகள், எழுத்துக்கள் உள்ளிட்டவற்றை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பெரியார் திராவிடர் கழகம் இந்த நூல்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், குடியரசு பத்திரிகையில் வந்த பெரியாரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள், எழுத்துக்களை புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிடப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் கடந்த 1952ம் ஆண்டு பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம் என்ற அமைப்பை துவங்கினார். அதில் 1925ல் தொடங்கப்பட்ட குடியரசு பத்திரிகையில் வெளியான தன்னுடைய கட்டுரைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை நூல்களாக அச்சிட்டு இந்த அறக்கட்டளை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று பெரியார் கூறியுள்ளார்.
மேலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அனாதை, வயதான, ஆதரவற்ற இல்லம் அமைத்து அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் 1982ல் குடியரசு பத்திரிக்கையின் நகல்கள் எடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் இந்த நூல்கள் திருடப்பட்டுள்ளன. தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்திடமிருந்து இதன் நகல்களை தாங்கள் பெற்றதாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் வார பத்திரிகையில் பேட்டியளித்துள்ளார். இது முற்றிலும் பொய்யானது.
ஆகவே குடியரசு பத்திரிகையில் வெளியான பெரியாரின் கட்டுரைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை பெரியார் திராவிடர் கழகம் புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிட தடைவிதிக்க வேண்டும். நஷ்ட ஈடாக ரூ.15 லட்சம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், புத்தகம், சிடி வெளியிட தடைவிதித்ததோடு, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications