துபாயில் திருச்சி கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு
துபாய்: திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி துபாயில் நடக்கிறது.
துபாயில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் படித்து முன்னாள் மாணவர்களின் சந்திப்பு வரும் 4ம் தேதி மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகிக்கிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சிறப்பு விருந்தினராக சவுதி அரேபிய ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ராஜகிரி அப்துல் மாலிக் கலந்து கொள்கிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஜமால் முகமது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள தொலை பேசி எண் 050 5489 609 தொடர்பு கொள்ளலாம்.