அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே உள்ள பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடந்தது.
காஞ்சிபுரம் உத்தரமேரூர் தாலுகா, காட்டுக்கொலை சர்வசேவா உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.
வி.வஜ்ஜிரவேல் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெயசங்கர் வரவேற்றார். இலக்கிய மன்றச் செயலர் வி.மோகனா மன்ற செயலறிக்கை வாசித்தார். புலவர் டி.இளந்திரையன் பொதிகை தமிழ் இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்தார்.
சேவாகல்வி அறக்கட்டளை நிர்வாகி எஸ்.முனீஸ்வரன் பரிசுகள் வழங்கினார். கல்வி திட்ட அமைப்பாளர் எஸ்.குமார், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சாமுண்டீஸ்வரி வாழ்த்திப் பேசினர்.












Click it and Unblock the Notifications