குமரி வள்ளுவர் சிலைக்கு 22ம் தேதி முதல் படகு சவாரி
அஞ்சுகிராமம்: கன்னியாகுமரி வள்ளுவர் சிலைக்கு ரசாயானப் பூச்சுப் பணிகள் முடிந்து விட்டதால் வருகிற 22ம் தேதி முதல் மீண்டும் படகு சவாரி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை உப்பு காற்றால் சேதமடையாமல் இருக்க ரூ.76 லட்சத்தில் ரசாயான பூச்சு பூசும் பணி கடந்த ஜீன் மாதம் 4ம் தேதி தொடங்கியது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் ராசாயன கலவை பூசும் பணி நிறைவு பெற்றது.
இதை தொடர்ந்து ரூ.10 லட்சம் செலவில் சிலை பீடம் பகுதியி்ல் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பணிகளை ஓட்டி திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிககப்பட்டு படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.
தற்போது கன்னியாகுமரியில் சீசன் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.
இதையடுத்து திருவள்ளுவர் சிலை பாறையில் நடந்து வரும் பணிகளை இன்னும் 2 தினங்களில் முடிக்க சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications