மலேசிய முஸ்லீம்கள் யோகா செய்ய திடீர் தடை

இஸ்லாமில் இதுபோன்றவற்றை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அசுத்தமானது என்று அது விளக்கம் தெரிவித்துள்ளது.
யோகாசனத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் உள்ளன. அவற்றை முஸ்லீம்கள் தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றும் நிலை உருவாகி விடும் என்று கூறி இந்தத் தடையை விதித்துள்ளதாக தேசிய பாத்வா கவுன்சில் என்கிற அந்த முஸ்லீம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் உள்ள 2.7 கோடி மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கு.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அப்துல் சுக்கூர் ஹூசேன் கூறுகையில், யோகாவை பின்பற்றுவது முஸ்லீம்களின் மதக் கோட்பாடுகளுக்கு முரணானது. இது இஸ்லாமுக்கு பொருத்தமான ஒன்றல்ல.
முஸ்லீம்களின் நம்பிக்கையை யோகா அழித்து விடும். எனவே முஸ்லீம்கள் யோகாசனம் செய்யக் கூடாது.
யோகாவில் இடம் பெறும் சில பயிற்சிகள் இந்துக்களின் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
இந்தியாவில் தோன்றிய யோகாசனம் உலக நாடுகள் பலவற்றிலும் பிரபலமாகி வரும் நிலையில் மலேசியாவில் இந்த திடீர் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு சட்டப்பூர்வமா ஒன்றல்ல என்ற போதிலும் தேசிய பாத்வா கவுன்சிலின் உத்தரவுகளை பொதுவாக மலேசிய முஸ்லீம்கள் மீறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications