வேட்டையாடப்படும் மயில்கள் !

கரூர் மாவட்டம், மாயனூர், சித்தலவாய், குளித்தலை, தோகமலை, பெட்டவாத்தலை, சூரியனூர், சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் வயல்கள் உள்ளது. இங்கு வாழை, நெல் போன்ற பல பயிர்கள் பயிறிடப்பட்டுள்ளன.
இந்த வயல்வெளிகளில் உள்ள புழு, மற்றும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளவும், வாழை பழங்களை சாப்பிடவும் மயில்கள் இந்த பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு இந்த பகுதிகளுக்கு தினசரி பல நூறு மயில்கள் வருகின்றன.
மயில்கள் வரும் திசை, பாதை ஆகியவற்றை அறிந்து வைத்துள்ள ஒரு கும்பல் மயில்களை அதன் மாமிசத்திற்காகவும், மருந்து உபயோகத்திறகும் நள்ளிரவில் வேட்டையாடி வருகிறது.
இந்த பகுதிகளில் மயில் வேட்டையாடப்படுவதாக இந்த பகுதியில் உள்ள சில தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதில் போதிய அக்கரை காட்டாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசியச் சின்னமான மயிலைக் கொல்வது மாபெரும் குற்றமாகும்.












Click it and Unblock the Notifications