ஸ்ரீவிலி.யில் நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூரில் "வேதாத்திரியம் ஓர் இலக்கியச் சோலை' நூல் வெளியீட்டு விழா ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வி. வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.
முருகன் வரவேற்றார். புலவர் ப. வெள்ளை எழுதிய "வேதாத்திரியம் ஓர் இலக்கியச் சோலை' என்னும் நூலை வெ. வெங்கட்ராமன் வெளியிட, எஸ்.ஆர். சர்வஜித் பெற்றுக் கொண்டார்.
இந்து மேல்நிலைப் பள்ளி தாளாளர் டி.ஏ.எஸ். ராமஸ்வாமி, உர வியாபாரிகள் சங்கத் தலைவர் பி. ரெங்கசாமி நாயுடு, புலவர் பாலகிருஷ்ணன், ராஜபாளையம் சேக்கிழார் மன்றத் தலைவர் ந. செண்பகம், ஏ. சண்முகவேலு, பிரபஞ்சன், அய்யாச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
புலவர் வெள்ளை ஏற்புரையாற்றினார். ஆர்.வி. அரவிந்தராஜ் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications