காரைக்குடி தமிழறிஞருக்கு மகாகவி பாரதி விருது
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தின் சார்பில் பாரதியாரின் 125-வது பிறந்த நாளையொட்டி தமிழறிஞர்கள் 10 பேருக்கு "மகாகவிபாரதி விருது' வழங்கப்படுகிறது.
இதில் காரைக்குடி தமிழிறிஞர் அரு. சோமசுந்தரனும் இந்த விருதைப் பெறுகிறார். ரூ. 25,000 பொற்கிழி, கேடயம் மற்றும் பாராட்டுப் பத்திரம் கொண்டது இந்த விருது.
இயல், இசை, நாடகம், ஊடகம், அறிவியல் தமிழ்ப் பணிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இதில் நாடகத் தமிழுக்குரிய விருது அரு. சோமசுந்தரனுக்கு வழங்கப்படுகிறது.
இவர் 1973ல் தமிழக அரசு நடத்திய பொற்கிழி காவியப் போட்டியில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடம் இவர் விருது பெற்றுள்ளார்.
இவர் ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் ஆகியவை குறித்து தொடர் சொற்பொழிவுகள் நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications