For Quick Alerts
For Daily Alerts
Just In
கலசலிங்கம் பல்கலையில் இலக்கிய வட்டம் துவக்கம்
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கலசலிங்கம் இலக்கிய வட்டம் எனும் தமிழ் ஆர்வ அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டு இலக்கியம் கூட்டங்கள் நடத்தப்படும்.
கலசலிங்கம் இலக்கிய வட்டத்தின் முதல் இலக்கியக் கூட்டம் வரும் 18ம் தேதி நடக்கிறது. பல்கலைக்கழக கருத்தரங்குக் கூட்ட அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு இணை வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமை தாங்குகிறார். துணை வேந்தர் டாக்டர் செல்லையா தங்கராசு முன்னிலை வகிக்கிறார்.
பிரபல இலக்கியப் பேச்சாளரும், முன்னாள் கல்லூரி முதல்வருமான சரசுவதி இராமனாதன் கம்பனும், கண்ணதாசனும் எனும் தலைப்பில் விழாப் பேரூரையாற்றுகிறார்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கலசலிங்கம் இலக்கிய வட்டத்தினர் செய்து வருகிறார்கள்.
Story first published: Monday, December 15, 2008, 14:30 [IST]