ராமேஸ்வரத்தில் ராமாயண சொற்பொழிவு
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சி குஜராத் பவனில் துவங்கியது. இம்மாதம் 31ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் இந்த சொற்பொழிவில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ராமேஸ்வரம் குஜராத் பவனில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கியது. ராம காவியத்தில் ராமர் வனவாசம், பட்டாபிஷேகம் அரசவை நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்தும் சொற்பொழிவாக தொடர்ந்து இம்மாதம் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஹரித்துவாரை சேர்ந்த சுவாமி கிரிராஜ் மகராஜ் முதல் சொற்பொழிவை நடத்தினார்.
வரும் 27ம் தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து விடுதிகளும் பதிவு செய்யப்பட்டு விட்டன.












Click it and Unblock the Notifications