சென்னையில் 2வது உலக சித்தர்கள் மாநாடு
சென்னை: சத்தியத்தின் சக்தி நிலை சங்கம் மற்றும் ஸ்ரீ அகஸ்தியர் ஞானபீடம் இணைந்து நடத்தும் 2வது உலக சித்தர் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.
மாநாட்டை துவக்கி வைத்து நிதியமைச்சர் க.அன்பழகன் பேசுகையில்,
உலக சித்தர் நெறி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிந்தித்து பார்த்தேன். ஏனென்றால் சித்தர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சித்தர்களின் ஞானத்தை பெற்றவர்களுக்கே அது பற்றி சரியாக தெரியாமல் இருக்கும் நிலையில், எனக்கு தெரியாததது பற்றி ஒன்றும் கவலை இல்லை.
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற வாசகம் இருந்தாலும், மக்கள் பல தெய்வங்களை வணங்கினாலும் பசிக்கிறவர்களுக்கு உணவு கொடுப்பதே உண்மையான இறைவனாகும். இறைவனுக்கு படைக்கபடும் படையல் மக்களுக்கு தான் சென்று சேருகிறது.
தமிழ்நாட்டில் சித்தர்களால் நாம் பக்குவம் பெற்றிருக்கிறோம். இந்த சமுதாயத்தின் வழிகாட்டிகள் சித்தர்கள் தான். ஒவ்வொரு மனிதனின் எண்ணம் தான் வாழ்க்கை, அந்த எண்ணத்தை உயர்த்துவது தான் சித்தர்களின் நெறி என்றார்.
மாநாட்டிற்கு வந்தவர்களை இரண்டாவது உலக சித்தர் நெறி மாநாட்டின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.மதிவாணன் வரவேற்றார். மாநாட்டில் சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், தொழிலதிபர் 'அருட்செல்வர்' பொள்ளாச்சி நா.மகாலிங்கம், அகத்தியர் ஞானபீடம் தங்கராசு அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications