2008ன் முக்கிய சம்பவங்கள்!
Subscribe to Oneindia Tamil

நமது தாத்தா, பாட்டிகள் எல்லாம் அங்கே பார் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பதை என்று கதை கூறி சோறு ஊட்டிய நிலாவுக்கு நிஜமாகவே போய் இந்தியர்களை பெருமைப்படுத்தியது இஸ்ரோ.
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ஏவிய சந்திராயன்-1 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்து இந்தியர்களின் காலரை உயர்த்திய தினம் அக்டோபர் 22.
எந்தவித பிசிரும் இல்லாத வகையில் சந்திராயன் -1 விண்கலம் நிலவை எட்டிப் பிடித்ததை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்த்தன.
நிலவின் பல்வேறு தோற்றங்களை, சந்திராயனில் இணைக்கப்பட்டுள்ள மூன் பிராப் இம்பேக்ட் கருவி படம் எடுத்து அனுப்பியபோது கலாம் முதல் தொலை தூரக் கிராமத்து கருப்பசாமி வரை ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை அடைந்தனர்.












Click it and Unblock the Notifications