2008ன் முக்கிய சம்பவங்கள்!
Subscribe to Oneindia Tamil

எம்.ஜி.ஆர். குடும்பத்தில் ஒரு அசம்பாவிதம். வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயக்குமார் என்கிற விஜயனை, சென்னை கோட்டூர்புரத்தில் ஒரு கும்பல் வெட்டித் தள்ளி விட்டு ஓடுகிறது.
படுகாயமடைந்த விஜயன் உயிரிழக்கிறார். எம்.ஜி.ஆர். பக்தர்களை அதிர வைத்த இந்த கொலைக்குப் பின்னணி சொத்துப் பிரச்சினை என்ற தகவல் மேலும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது.
அதை விட பேரதிர்ச்சியாக சுதாவின் தங்கை பானுதான், கூலிப்படையை ஏவி இந்தக் கொலையை நடத்தியது என்ற தகவலை போலீஸ் வெளியிட தமிழகமே அதிர்ந்து போகிறது.
ஜூன் 4ம் தேதி நடந்த இந்த படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய பானு, கூலிப்படைத் தலைவனாக செயல்பட்ட காவலர் கருணாகரன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். விரைவில் விசாரணை தொடங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications