தமிழறிஞர்களை வளர்த்த சரித்திர பூமி நெல்லை: பாரதிராஜா
Subscribe to Oneindia Tamil

நெல்லை பத்திரிக்கையாளர் சங்க நூலக திறப்பு விழா ராமலிங்கம் தலைமையில் நடந்தது. இணை செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். சங்க ஆலோசகர் அய்கோ வரவேற்றார்.
நூலகத்தை திறந்து வைத்து இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், ஒரு ஊடக படைப்பாளியாக நான் இதில் கலந்து கொள்கிறேன்.
தமிழ் வளர்த்த பெருமை நெல்லையை சேரும். அதிக தமிழ் அறிஞர்களை வளர்த்த பூமி இது. தாமிரபரணி மட்டும்தான் தமிழகத்தில் பிறந்து தமிழகத்தில் கடலில் கலக்கிறது.
புத்தக படிப்பு இப்போதெல்லாம் குறைந்து வருகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, நாடகங்கள் மக்களை தங்கள் வசம் திருப்பி விட்டுள்ளன. நூலகம் தான் என்னை வளர்த்தது. நூல்களை ஆழ்ந்து படித்தால்தான் கருத்துகள் மனதில் படியும்.
நூலகம்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்கும். மொழி, இனம், பண்பாடு, தான் நம்மை வளர்க்கும் என்றார் பாரதிராஜா.












Click it and Unblock the Notifications