புலமைப்பித்தனின் 'ஒரு பூகோளமே பலி பீடமாய்'
Subscribe to Oneindia Tamil
கவிஞர் புலமைப்பித்தன் 'ஒரு பூகோளமே பலி பீடமாய்' என்ற தலைப்பில் நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகர் சர் பி.டி. தியாகராயர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை தாங்கினார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் நூலை வெளியிட, முதல் பிரதியை நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குனர்கள் மணிவண்ணன், சீமான், பி.சி.அன்பழகன், ஓவியர் புகழேந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, இயக்குனர் வி.சி.குகநாதன் வரவேற்றார். இறுதியில், நூலாசிரியர் புலமைப்பித்தன் ஏற்புரையாற்றினார்.












Click it and Unblock the Notifications