தியாகி கோதையம்மாளுக்கு ஓய்வூதியம் - காங். வழங்கியது

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் மறைந்த தியாகி அழகப்பபிள்ளை. இவர் வீரவாஞ்சிநாதனின் நண்பர். ஆங்கிலேயர் ஆட்சியில் கலெக்டராக இருந்த ஆஷ்துரை கொலை வழக்கில் 12வது எதிரி.
இவரது மகள் கோதையம்மாள் (வயது 87). இவர் அப்போதைய காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளார். இவர் கடந்த 17 ஆண்டுகளாக அரசிடம் தனக்கு தியாகி ஓய்வூதியம் கேட்டு போராடி வந்த நிலையில் அதிமுக ஆட்சியில் ரூ.500 ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கோதையம்மாளின் வறிய நிலையை செய்திகள் மூலம் அறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேவி தங்கபாலு கட்சி அறக்கட்டளை சார்பில் மாதம் தோறும் ரூ.3000 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து நேற்று தியாகி கோதையம்மாளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.3000 ஓய்வூதிய காசோலையை நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொடிகுறிச்சி முத்தையா வழங்கினார்.
தியாகி கோதையம்மாள் கூறும்போது அரசு நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும, காங்கிரஸ் கட்சி சார்பில் ஓய்வூதியம் வழங்கி கெளரவப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார். இவ்விழாவில் ஏராளமான காங்கிரஸ் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications