துபாய் ஈமான் அமைப்பின் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி காட்சி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இஸ்லாமிய சிறப்பு ஒலி, ஒளி காட்சித் தொகுப்பு வெள்ளிக்கிழமை மாலை சென்டிரல் பள்ளியில் நடைபெறுகிறது.
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி காட்சி தொகுப்பு ஹிஜிரி 1430, ஸபர் பிறை 4(30.01.2009) வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் அல் நஹ்தா பகுதியில் உள்ள சென்ட்ரல் பள்ளியில் நடைபெற இருக்கிறது.
மனித வள மேம்பாட்டுக்கு உதவிடும் இச்சிறப்பு நிகழ்ச்சியினை தஞ்சை ஜலாலுதீன் தொகுத்து வழங்க இருக்கிறார். சிங்கப்பூர் பெரோஸ் கான் குடும்ப உறவின் அவசியம் குறித்த உரையினை வழங்க இருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது வருகையினை 050 58 53 888 / 050 2533712 / 050 7752737 / 050 51 96 433 ஆகிய எண்களில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதளத்தை அணுகலாம்